Monday, October 8, 2012

எழுத்தின் இலக்கு



ஊர் பற்றி யெரிந்தாலும் கவலையின்றி
உறங்கிடுவோர் ஒரு கோடி ஆனாலும்
சீர்கெட்ட மதியுடையோர் அவர்க்கின்றி
சிந்திப்போம்; சிலருக்கே;நமது எண்ணம்
வேர்பற்றி எழுகின்ற ஆலம் போல,
விழுதூன்றும்;நல்லோரின் நெஞ்சிலிங்கு;
ஓரிருவர் என்றாலும் அவர்பொருட்டே
உறுதியுடன் எழுதுவதே,இலக்கு என்போம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
8.10.2012

No comments: