Friday, February 17, 2012

உள்ளத்தில் உள்ளது கவிதை!

"நேர்மையோ டிருத்தல்;நாளும்
நேர்வழி நடத்தல்;புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்ம்மையை எதிர்த்து நிற்றல்

இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை  என்று
அளிக்கின்றேன்;உணர்வ தாரோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.2.2012

1 comment:

V.Rajalakshmi said...

கணமேனும் விலகாத கலைவாணிதான்!