அதுவே என்றன் வாழ்வின் கணக்கு;
கவ்விய மனது;
கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு
விதைப்பதன்பொருட்டு!
வள்ளுவன்,மூலன்,வார்த்தைகள்
எல்லாம்
வரிசை கட்டிய
தமிழ் ஊற்றாக
வள்ளல் பெருமான்
போன்றோர் வடிவில்
வந்த ஞானியர் திருக் கூற்றாக;
விதைத்துச்
சென்ற வித்துக்கள் மண்ணில்
விளைந்தவை
இங்கு அடர்வனம் ஆக;
புதையலைப்
போலத் தேடி அவற்றைப்
புலவர்கள் அமுதப் பொங்கலிட்டனர்!
சித்தரும் முத்தரும்
சிந்தித்த மொழியென
பித்தன்யானும்
பேயாய் அலைந்து-
புத்தியில் அவற்றைப் புரிந்து கொண்டே
புதுப்புது விளைச்சலை
அறுவடை செய்து-
நட்ட நிசியிலும்
நடுநின்றுணர்ந்து
எட்டிப் பிடித்ததை
இம்மொழியாக்கி,
எட்டுத்திசையிலும்கொட்டி முழங்கி
எவரும் உண்ணத்
தகுந்தவை என்றே-
கம்பன் இளங்கோ,காட்டிய தமிழில்
கொம்பன் பாரதிகூறிய வாறே
நம்தொழில்
எழுத்தென;நாட்டுக் கீந்து,
நல்லவை நவின்று சோரா திருப்பது!
நம்பிக்கை கொண்டு
நாடிடுவோர்முன்
நாளும் இதையே
நந்தா விளக்கென-
தெம்புடன்
சொல்லித் தெளிவுடன் வாழ்வது:
தேசம் இதனைத்
தெரிந்து கொள்க!
எதையும் இங்கு
எதிர்கொண் டிருந்து
எதிலும் கலங்கா
மலைபோல் நின்று
விதியை மாற்றும்
விதியை எழுதி
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!
விதைப்பது தான்என் எழுத்தின் இலக்கு!
இவண்-
கிருஷ்ணன்பாலா
10.1.2012
10.1.2012
1 comment:
//கவ்விய மனது; கருதுவ தெல்லாம்
கவிதையை இங்கு விதைப்பதன்பொருட்டு!//
வித்துக்கள் எல்லாம் சத்து என்று வானம் தொடும் விருட்சம் சொல்கிறது
Post a Comment