Saturday, January 14, 2012

கவி’தை’ வாழ்த்து!








புதியதை,இனியதைத் தருவ ‘தை’
பூமியில் யாவரும் பெறுவதை
எதிர்வரும் நாள்முதல் காண்பதை
இறையதைவணங்கியே வாழ்த்திதை
‘தைஇதன் வருகையில்வரைகிறேன்;
தமிழரின் தனிப் பெரும் நாளிதை
தரணியில் போற்றுவோம் நண்பரே,
அமிழ்தினும் இனியநம் நட்பிலே
அனைவரும் மகிழ்வ ‘தை’ விரும்புவோம்!

நட்புடன்
கிருஷ்ணன்பாலா
14.1.2011

No comments: