Thursday, August 9, 2012

என்எழுத்து எப்பொழுதும்!


















அணிதிரளும் வார்த்தைகளை
அழகுத் தமிழாக்கி;இங்கு 
மணி மணியாய் எதிரொலிக்க
மனந் திறந்து எழுகின்றேன்:

திணிப்பதில்லை நாம் எதையும்;
தெளிவோடு மானு டத்தின்
பிணியான பிசகை எல்லாம்
பெயர்த்தெறியத் துடிக் கின்றேன்!

தரம் மிகுந்த எண்ணத்தில்
தடம் பதித்த சிந்தனைகள்;
உரம் மிகுந்த எழுத்துக்களில்
உணர்வோடு நிமிர்ந் திருக்கும்!

தேன் எடுக்கும் ஈக்களுக்கு
தேமதுரச் சோலை என
நான் படைக்கும் எழுத்துக்கள்
நலம் பயக்கும் கருத்துக்கள்!

’பா’மரம்தான்: காய்க் கின்றது!
பாய்மரம்தான்: விரிக்கின்றது!
தீமைகளை எதிர்க் கின்றது;
தேசமிதன் நலன் கருதி!

ஞானமுள்ளோர் உணர் கின்றார்:
நல்லன்பு பொழி கின்றார்
நானதிலே நனை கின்றேன்:
நட்புறவை வளர்க் கின்றேன்!

இலக்கோடு எழுது வதே
இலக்கியமாய் நிலைத் திருக்கும்;
இலக்கில்லா எழுத் துக்கள்
இப்பொழுதே தொலைந்து விடும்:

தொலைப்பதற்கே எழுதி டுவோர்;
தோழமையை மறுக் கின்றேன்:
தொலைதூரப் பார்வை யுடன்
தொடர்வோரை அழைக் கின்றேன்!

வாருங்கள் தோழர் எலாம்
வாழ்வி யலின் மேன்மைகளைச்
சாருங்கள்; தமிழி யலின்
சான்றாண்மை பகர்ந் திடுவீர்!!

துணிவுடனே எழுது வதில்;
தோற்பதில்லை ஒரு பொழுதும்!
இணையத்தில் இறு மாப்பில்
என்எழுத்து எப் பொழுதும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
9.8.2012

No comments: