Saturday, July 20, 2013

வாழி,நீ வாலி!

 
ஞானம் மிகும் கவிஞனுக்கு
நண்பரெலாம் விடை கொடுத்தார்;
போனவனின் புது நடையும்
பொய்யில்லாத் தமிழ்ப் பாட்டும்
வானவருக்கு விருந் தென்று
வந்துரைத்த மழை நடுவே-
ஆனவரை கவிஞரெலாம்
அவரவர்தம் விழி துடைத்தார்!

வாலிக்கு முன்னாலே
வாலாட்ட ஆளில்லை;
வாலிக்குப் பின்னாலும்
வரிசைக்கு ஆளில்லை1
கேலிக்குச் சொல்வதற்கு
கேனைபல இருந்தாலும்
வாலிக்கு நிகராக
வைக்க ஒரு கவிஞனிலை!

இவண்-
கிருஷ்ணன்பாலா 
19.7.2013

No comments: