Thursday, November 14, 2013

எனது ஆத்திச் சூடி!

 

ஆத்திச் சூடி அவ்வை சொன்னாள்;
அவளென் பாட்டி; அவள் மொழி கொண்டு
யாத்திடும் இதுவும்  அஃதே என்று
ஏற்போர் என்றன் தமிழ்க் கேளிரே!
-------------------------------------------------

அறத்தமிழ், நாடு;
ஆரியம் பேசேல்;
இறைநெறி உணர்;
ஈனரை விலக்கு;
உலகத்தில் ஓங்கு;
ஊருடன் வாழ்;
எதிரியை வீழ்த்து;
ஏய்த்து உண்ணேல்;
ஐயம் கொள்ளேல்;
ஒன்றே இறை;
ஓடி ஒளியேல்:
ஒளவை சொல் கேள்;
அஃதே வாழ்க்கை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2013

2 comments:

Anonymous said...

நானும் எழுதினேன் அதனாலே ஆவலுடன் கிளிக்கினேன்.
இனிமை.
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.

பாலகோபாலன் நம்பியார் said...

21'ஆம் நூற்றாண்டின் புதிய ஆத்திச்சூடி