Wednesday, November 6, 2013

வாழ்தல் இனிது!














வாழ்தல் இனிது,உணர்வீர்;அவ்
வழக்கம் என்பது மானுடர்க்கே!
சூழ்நிலை எதிலும் வாழ்தலையே
சுவைத்திடுவீர் எம் மானுடரே!
தாழ்வதும் உயர்வதும் இவ்வுலகில்
தாங்குதல் மானுடர் கடனென்று
வாழ்தல் என்பதுதான் அறிவு;
வையக்தீர்;இதை உணர்வீரே!!

சூறாவளிபோல் சில சமயம்;
சோகமும் சுகமும் வீசுவதும்
வேறொரு சமயம் பேரமைதி
விளைந்து அதுவும் மாறுவதும்
மாறா விதிதான் என்றுணர்ந்து
மாண்புடை மக்கள் வாழ்கின்றார்;
தேறா மாக்கள்தாம் அதனைத்
தெளிவில்லாமல் உழல்கின்றார்!

அன்பும் அறனும் உயர்நெறிகள்;
அவை இல்லாகில்பெரும் தாழ்வு;
பண்பும் பயனும் அறிவோர்க்கே;
பழுதில்லாத  உயர் வாழ்வு;
என்பும் தோலும் இதன் சுகமும்
இன்பம் என்று நினைப்போர்கள்
நன்று வாழ முடியாது;ஆம்!
நன்மை,தீமை உணர்வீரே!
  
இவண் –
கிருஷ்ணன்பாலா
25.10.2011

No comments: