Thursday, October 14, 2010

முழுமுதற் சரணம்!

                                                     























பூதம் ஐந்தையும் பூட்டிய கரத்துளன்;
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்:
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்;
பாதம் பணிந்துளம் பற்றுகின் றோமே!

எண்ணும்காரியம் யாவும் வெற்றி
பண்ணும் படியே அருள்க;உன்னை
நண்ணும் மனமே தந்தருள்;இந்த
மண்ணுயிர்க் கெல்லாம் முதலே!

மறுமையைத் தடுக்கும்;ஞானம்
மலர்ந்திடும்;மணக்கும்;மனிதப்
பிறவியின் பெருமை எல்லாம்
பேசிட வைக்கும்;வாழ்வின் -

வறுமையைப் போக்கும்;உலகம்
வணங்கிடச் செய்யும்,மேலோர்
உறவினில் வைத்தே,நம்மை
உய்விக்கும் வேழம் போற்றி!

அறநெறி திகழ்ந்திடும் வாழ்வு;
அதில் உனைத் தொழுவதுதானே?
முறைபட உணர்ந்தவன்,நானே
முழுவதும் சரண் அடைந்தேனே!                                        

கணபதி தாள்பணிந் துள்ளம்;                                                          
களிமிகக் கொள்வது காண்பீர்;                                                          
குணம்மிகும் அவனருள் வேண்டி;
கும்பிடு வோர்க் கிது வாழ்வே!



இவண்,
கிருஷ்ணன்பாலா 
14.10.2010  

1 comment:

V.Rajalakshmi said...
This comment has been removed by the author.