பூதம் ஐந்தையும் பூட்டிய கரத்துளன்;
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்:
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்;
பாதம் பணிந்துளம் பற்றுகின் றோமே!
எண்ணும்காரியம் யாவும் வெற்றி
பண்ணும் படியே அருள்க;உன்னை
நண்ணும் மனமே தந்தருள்;இந்த
மண்ணுயிர்க் கெல்லாம் முதலே!
மறுமையைத் தடுக்கும்;ஞானம்
மலர்ந்திடும்;மணக்கும்;மனிதப்
பிறவியின் பெருமை எல்லாம்
பேசிட வைக்கும்;வாழ்வின் -
வறுமையைப் போக்கும்;உலகம்
வணங்கிடச் செய்யும்,மேலோர்
உறவினில் வைத்தே,நம்மை
உய்விக்கும் வேழம் போற்றி!
அறநெறி திகழ்ந்திடும் வாழ்வு;
அதில் உனைத் தொழுவதுதானே?
முறைபட உணர்ந்தவன்,நானே
முழுவதும் சரண் அடைந்தேனே!
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்:
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்;
பாதம் பணிந்துளம் பற்றுகின் றோமே!
எண்ணும்காரியம் யாவும் வெற்றி
பண்ணும் படியே அருள்க;உன்னை
நண்ணும் மனமே தந்தருள்;இந்த
மண்ணுயிர்க் கெல்லாம் முதலே!
மறுமையைத் தடுக்கும்;ஞானம்
மலர்ந்திடும்;மணக்கும்;மனிதப்
பிறவியின் பெருமை எல்லாம்
பேசிட வைக்கும்;வாழ்வின் -
வறுமையைப் போக்கும்;உலகம்
வணங்கிடச் செய்யும்,மேலோர்
உறவினில் வைத்தே,நம்மை
உய்விக்கும் வேழம் போற்றி!
அறநெறி திகழ்ந்திடும் வாழ்வு;
அதில் உனைத் தொழுவதுதானே?
முறைபட உணர்ந்தவன்,நானே
முழுவதும் சரண் அடைந்தேனே!
கிருஷ்ணன்பாலா
14.10.2010
14.10.2010
1 comment:
Post a Comment