Friday, October 15, 2010

வல்லோய் நீ,என் வழித்துணை!

          









செல்லும் காரியம் யாவும்;இங்கு
வெல்லும் படிநீ,அருள்வாய்;
சொல்லும் செயலும் ஒன்றாய்க் காணும்
சுகம்அதில் மலர்ந்திடச் செய்வாய்;
அல்லும்பகலும் உனையே பேணும்
அகமே இணைந்திடக் கனிவாய்;
வல்லோய் நீ என் வழித்துணையாக
வாழ்நாள் எல்லாம் வருவாய்!

(படம்: குருநாதர் ஸ்ரீ ராஜகிரி  ஸ்வாமி சமாதிக் கருவறை)

No comments: