Saturday, October 16, 2010

வாணீ - வா,நீ!

இன்று,ஆயுத பூஜை நாள்!

தீதிலன்,உலகில் யானோர்
தெளிவுளன் நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்; இன்று,இப்போது
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்
சுடர்க,இவ்வுல கெல்லாமே!

இவண்-
கிருஷ்ணன் பாலா / இரவு -  09:18

1 comment:

V.Rajalakshmi said...


பாரினில் யாதுமில்லை தெளிவுற்ற ஞானத்தை வெல்ல...