Saturday, October 16, 2010

நானெது செயினும்...

நானெது  செயினும்;விளையும்
நன்மை,தீங் கெவைஎன் றாலும்
‘ஆனதுன் அருள் என்றே’நான்
அகம்தனில் நிலைகொள் வேன்;நீ
தான்என் உணர்வுடன்  நின்று
‘தயவுடன் காக்க வேண்டும்!’
வானவர் போற்றும் ஞான
வள்ளலே.கேட்கின் றாயா?

1 comment:

V.Rajalakshmi said...

வள்ளலார் பற்றிதானே இது!