Friday, December 3, 2010

பற்றிலான் பற்றி.....

 THE SUPREME NOTE


பற்றிலான் பாதம் பற்றி
                'பற்றறு' என்றேன்; அவனோ
பற்றிலான்' ஆகி, என்னைப்
                 பற்றியோர் பற்றில்லாமல்
வெற்றிசை நோக்கி நின்றான்;
                விரக்தி யானுற்றேன்; அந்தோ!
பற்றிலான் பற்றி, இந்தப்
               பாரினில் வாழ லாமோ?

-
கிருஷ்ணன் பாலா
2009

No comments: