பற்றிலான் பாதம் பற்றி
'பற்றறு' என்றேன்; அவனோ
‘பற்றிலான்' ஆகி, என்னைப்
பற்றியோர் பற்றில்லாமல்
வெற்றிசை நோக்கி நின்றான்;
விரக்தி யானுற்றேன்; அந்தோ!
பற்றிலான் பற்றி, இந்தப்
பாரினில் வாழ லாமோ?
-
கிருஷ்ணன் பாலா2009
No comments:
Post a Comment