Friday, December 3, 2010

ஊருக்கு நல்லது சொல்வேன்!

அழகாய் இருப்பதை விடவும் உலகில்
              அடுத்தொரு துன்பம் இல்லை; உண்மை!
 பழகா திருக்கும் வரையில் எவரும்
               பகைவர்கள் ஆவதும் இல்லை;தர்மம்
வழுவா திருப்போர் வாழ்வில் துன்பம்
              வரவுகள் ஆவதும் இல்லை; நீ
எழுவாய்,இதனை அறிவாய், அறிவாய்!
            என் மனம் சொல்லுவ தாலே!
 -கிருஷ்ணன் பாலா / 17.7.2010

2 comments:

Unknown said...

அழகாய் இருப்பதை விடவும் உலகில் அடுத்தொரு துன்பம் இல்லை; உண்மை!

ஆம்! அழகைத்தேடி தான் எத்தனை
முயற்ச்சி, தளர்ச்சி,இதில் ஆணென்ன, பெண்னென்ன ஆண்டவனையும் அந்நிலைக்கே (பாழடைந்த கோயில்கள், அலங்காரமில்லா சிலைகள்) கொண்டுவந்துவிட்டோம்.

பழகா திருக்கும் வரையில் எவரும்
பகைவர்கள் ஆவதும் இல்லை;

ஆம்! நெருங்கியால் சுடும் நெருப்பு, தொடர்ந்து பருகியால் புளிக்கும் பால்.


நீ தர்மம் வழுவா திருப்போர் வாழ்வில் துன்பம் வரவுகள் ஆவதும் இல்லை;

ஆம்! தர்மம் தலையைமட்டுமல்ல, தலைமுறையையும் காக்கும்.
எழுவாய்,இதனை அறிவாய், அறிவாய்!

என் மனம் சொல்லுவ தாலே!

நற்றோர் சொல் நாராயணன் சொல்.

பாஸ்கரன்.

V.Rajalakshmi said...

அழகாய் இருப்பதை விடவும் உலகில் அடுத்தொரு துன்பம் இல்லை...

அறிவும் கைகோர்த்து கொண்டால்
அடுத்தொரு பிறவியும் இல்லை...