அழகாய் இருப்பதை விடவும் உலகில்
அடுத்தொரு துன்பம் இல்லை; உண்மை!
பழகா திருக்கும் வரையில் எவரும்
பகைவர்கள் ஆவதும் இல்லை;தர்மம்
வழுவா திருப்போர் வாழ்வில் துன்பம்
வரவுகள் ஆவதும் இல்லை; நீ
எழுவாய்,இதனை அறிவாய், அறிவாய்!
என் மனம் சொல்லுவ தாலே!
-கிருஷ்ணன் பாலா / 17.7.2010
அடுத்தொரு துன்பம் இல்லை; உண்மை!
பழகா திருக்கும் வரையில் எவரும்
பகைவர்கள் ஆவதும் இல்லை;தர்மம்
வழுவா திருப்போர் வாழ்வில் துன்பம்
வரவுகள் ஆவதும் இல்லை; நீ
எழுவாய்,இதனை அறிவாய், அறிவாய்!
என் மனம் சொல்லுவ தாலே!
-கிருஷ்ணன் பாலா / 17.7.2010
2 comments:
அழகாய் இருப்பதை விடவும் உலகில் அடுத்தொரு துன்பம் இல்லை; உண்மை!
ஆம்! அழகைத்தேடி தான் எத்தனை
முயற்ச்சி, தளர்ச்சி,இதில் ஆணென்ன, பெண்னென்ன ஆண்டவனையும் அந்நிலைக்கே (பாழடைந்த கோயில்கள், அலங்காரமில்லா சிலைகள்) கொண்டுவந்துவிட்டோம்.
பழகா திருக்கும் வரையில் எவரும்
பகைவர்கள் ஆவதும் இல்லை;
ஆம்! நெருங்கியால் சுடும் நெருப்பு, தொடர்ந்து பருகியால் புளிக்கும் பால்.
நீ தர்மம் வழுவா திருப்போர் வாழ்வில் துன்பம் வரவுகள் ஆவதும் இல்லை;
ஆம்! தர்மம் தலையைமட்டுமல்ல, தலைமுறையையும் காக்கும்.
எழுவாய்,இதனை அறிவாய், அறிவாய்!
என் மனம் சொல்லுவ தாலே!
நற்றோர் சொல் நாராயணன் சொல்.
பாஸ்கரன்.
அழகாய் இருப்பதை விடவும் உலகில் அடுத்தொரு துன்பம் இல்லை...
அறிவும் கைகோர்த்து கொண்டால்
அடுத்தொரு பிறவியும் இல்லை...
Post a Comment