Friday, December 24, 2010

ஈசன் பிறந்தான்!


ஈசன் பிறந்தான்...
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்....
  •  

ஈசன் உலகில் பிறந்தான் உண்மை;
இஸ்ரேல் மண்ணை மகிமைப் படுத்தி, 
மாசில் மரியாள்; வயிற்றில் மகவாய்
மாட்டுத் தொழுவம் அவனது பிறப்பு!


கர்த்தரின் உருவாய் அவதரித்திங்கு
கருணை பொழியும் கைகளை உயர்த்தி
அர்த்தம் மிகுந்த அருள் வழி காட்டி
அனைவரும் வாழ சிலுவையை ஏற்றான்!




பிதாவே,இவர்கள் செய்த பாவத்தை எல்லாம்
மன்னித்தருளுங்கள்!
கழுமரம் அவனைத் தாங்கி நின்றதால்
கர்த்தரின் ரத்தம் தோய்ந்து கொண்டது;
தொழுமரம் என்றே ஆகி நெஞ்சில்
தொட்டு வணங்கும்  பேறு பெற்றது!

உண்மை, அன்பு,சமாதானம்
உயர்ந்த வாழ்வை மனிதர் பெற்றிட
மண்ணில் செய்த பாவத்தையெல்லாம்;
மன்னித் தருளும் கருணயைப் பொழியும்

ஈசன் ஏசுவின் பிறப்பை எண்ணி
இந்நாள் அனைவரும் வணங்கிடுவோமே;
நேசன் அவனது நாமம் ஜெபித்து
நெகிழ்ந்தே அன்பைப் பகிர்ந்திடுவோமே!

இவண்-
கிருஷ்ணன் பாலா







---------------------------------------------------------------------------------------------------
காண்க: உலகத் தமிழர் மையம் -வலைதளம்
(உலகத் தமிழருக்கு உணர்வூட்டும் உண்மை மையம்).
http://ulagathamizharmaiyam.blogspot.com/

1 comment:

Anonymous said...

நல்ல கவிதை . நத்தார் வாழ்த்துகள்.
Vetha. Elangathilakm.
Denmark.