Thursday, December 30, 2010

வருக, எந்தன் முக நூலில்!


வருக எந்தன் முகநூலில் ;
வாருங்கள் நண்பர்களே!
தருக;உங்கள் கருத்துக்களைத்
தமிழில் தாருங்களே!



புத்தம்புதிய பதிவுகளை;ஒரு
புதுமையின் வடிவ மென;
நித்தமும் இங்குஎழுதுகிறேன்;
நீதியைக் கூறுகின் றேன்!

சாதி மதங்களைச் சாடுகிறேன்;
சத்தியம் பேசுகின் றேன்;
வேத நெறிகளை நாடுவதில்;வீண்
வேட்கையை வீழ்த்து கிறேன்!

மானுடம் யாதெனப் பாடுகிறேன்;
மக்களுக் கோது கின்றேன்;
நானொரு மானுடன் என்பதற்கே
நல்லதைத் தேடு கின்றேன்!



பண்புடன் நல்ல பக்குவம்கூட்டிப்
பதிவுகள் செய் வதினால்;
நண்பர்கள் நல்லவர் நாடுகின்றார்;
நற்றமிழ் போற்றுகின்றார்!

தேசநலத்துடன் நம்மொழியில்
தேர்ச்சி மிகுந்தவரும்;மெய்
நேசம் மிகுந்து பண்பாட்டின்
நீதியை உணர்ந் தவரும்

வேதநெறிகளை ஆய்பவரும்;பல
வித்தை தெரிந் தவரும்
மேதமையோ டென் எழுத்துக்களை
மெச்சி மகிழு கின்றார்!

’நல்லவர் யாவரும்வாரும்என
நட்பை விரிக் கின்றேன்;
எல்லை யில்லாதொரு நட்புவட்டம்
எண்ணி அழைக் கின்றேன்!

வீணுரை;வெற்றுரை ஏதுமில்லா
விஷயங் கள்பேசு தற்குப்
பேணிடும் நல்ல நட்பு வட்டம்
பெருக்கிட வேண்டு மென்றால்-

வாருங்கள் நண்பரே வாரும் என
வந்தனம் கூறு கின்றேன்;
சேருங்கள்;எந்தன் முகநூலில்;நல்ல
செந்தமிழ் சொந்த மென்றே!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
30.12.2010

No comments: