![]() |
ஈசன் பிறந்தான்... |
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்....
ஈசன் உலகில் பிறந்தான் உண்மை;
இஸ்ரேல் மண்ணை மகிமைப் படுத்தி,
மாசில் மரியாள்; வயிற்றில் மகவாய்
மாட்டுத் தொழுவம் அவனது பிறப்பு!
கர்த்தரின் உருவாய் அவதரித்திங்கு
கருணை பொழியும் கைகளை உயர்த்தி
அர்த்தம் மிகுந்த அருள் வழி காட்டி
அனைவரும் வாழ சிலுவையை ஏற்றான்!
கர்த்தரின் ரத்தம் தோய்ந்து கொண்டது;
தொழுமரம் என்றே ஆகி நெஞ்சில்
தொட்டு வணங்கும் பேறு பெற்றது!
உண்மை, அன்பு,சமாதானம்
உயர்ந்த வாழ்வை மனிதர் பெற்றிட
மண்ணில் செய்த பாவத்தையெல்லாம்;
மன்னித் தருளும் கருணயைப் பொழியும்
ஈசன் ஏசுவின் பிறப்பை எண்ணி
இந்நாள் அனைவரும் வணங்கிடுவோமே;
நேசன் அவனது நாமம் ஜெபித்து
நெகிழ்ந்தே அன்பைப் பகிர்ந்திடுவோமே!
இவண்-
கிருஷ்ணன் பாலா
---------------------------------------------------------------------------------------------------
காண்க: உலகத் தமிழர் மையம் -வலைதளம்
(உலகத் தமிழருக்கு உணர்வூட்டும் உண்மை மையம்).
http://ulagathamizharmaiyam.blogspot.com/
1 comment:
நல்ல கவிதை . நத்தார் வாழ்த்துகள்.
Vetha. Elangathilakm.
Denmark.
Post a Comment