மனித நேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்தி,நமைஉய் விக்கவும்
தனியொரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;உண்மை!
புனிதன்ஏசு அவன்தான் கண்டீர்!
போற்றி வணங்குதல் மானுடர் கடமை!
வணக்கத்துடன்,
கிருஷ்ணன்பாலா
25.12.2011
No comments:
Post a Comment