ஏழையர்க்கு எழுதுங்கால்,ஏழ்மைநிலை யோடிருக்கும்;
இறுமாப்புக் கொள்ளுங்கால் செறுக்கோடுதான் மிளிரும்;
வாழையடி வாழையென வந்துதிக்கும் என் தமிழை
வந்திங்கு உண்போர்க்கு வரும்பொருளைக் காட்டுகின்றேன்!
வாழையிலைத் தமிழ்
விரித்து வருவோரை உண்பதற்கு
வருகவென
அழைப்பதுதான்;இங்கென்றன் விருந்தோம்பல்;
ஏழைகளும்
செல்வர்களும் என்படைப்பின் விருந்தினர்கள்;
இங்கென்றன் எழுத்துக்கள்
இலக்கியத்தாய் பசியாற!
கலைமகள் என்அன்னை கருணை செய்தருளியதைக்
கரமெடுத்து எழுதுகின்றேன்;காண்போர்க்கு இது புரியும்;
சிலபோழ்து பண்டிதர்க்குச்
சிறுபிழையும் பெரிதாகும்;
செந்தமிழில் எழுதுவது இங்கென்றன் நோக்கமல்ல!
‘எத்தனை பேர் தமிழறிந்து எண்ணத்தை விரிக்கின்றார்?’.
என்பதல்ல என் பார்வை; என் வழியில், நற்றமிழின்
வித்தகத்தை விரித்திங்கு விஷயத்தைச் சொல்வதுதான்:
விவாதம் என வந்தால்;விளையாடிப் பார்ப்பதுதான்!
விஷயத்துடன்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011
கிருஷ்ணன்பாலா
23.10.2011
1 comment:
மூக்கு நீளம் அதான் விளையாட மனமிருந்தும் ???!!!...... கேள்விகளும்,ஆச்சரியங்களும்,தொடர்பு பள்ளியாக பயந்து பார்க்கிறது
Post a Comment