Monday, December 12, 2011

இதுவே நாம்!

எழுதத் தெரிந்த நண்பர் யாவரும்
எனது பொதுஉடைமை;பதில்
எழுதத் தெரியா திருப்போர்எல்லாம்
அவரவர் தனி உடைமை!
 

உங்கள் கருத்தைப் படித்துப் பார்த்து
உடனே எழுதுவது;அது
இங்கு பொதுவில் அறிவிற்குரிய
இலக்கியம் எனும்படித்தான்!

காமெடி,சினிமா,காதல் பித்து,
கவிதை எனும் பெயரில்
யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
என்னை மன் னிப்பீர்!



ஒருசில விஷயம் உருப்படியாக
உணர்ந்தால் ஏற்றிடுவேன்;
'கரு' இருந்தால் அதுஎது என்றாலும்
கரங்களை நீட் டிடுவேன்!


தத்துப் பித்தெனத் தமிழில் எழுதித்
தள்ளிடும் ஒரு போக்கை;அதைத்
தத்துவம் போலக் கருதிக் கொள்ளும்
தவிப்பில் மிதக் காதீர்!


அவரவர் எண்ணம் அவரவர் சுமக்க
அதைநாம் வெறுப்ப தில்லை;
'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்ல!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
12.08.2010

2 comments:

Anonymous said...

''..'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்ல!...''
ரெம்ப சர்வாதிகாரம் போல உள்ளதோ!.....

V.Rajalakshmi said...

தத்துப் பித்தெனத் தமிழில் எழுதித்
தள்ளிடும் போக்கை தத்தி நடந்து தவறி விழ்ந்து எழும் மழலை என மன்னிப்பீராக