எழுதத் தெரிந்த நண்பர் யாவரும்
ஒருசில விஷயம் உருப்படியாக
தத்துப் பித்தெனத் தமிழில் எழுதித்
தள்ளிடும் ஒரு போக்கை;அதைத்
தத்துவம் போலக் கருதிக் கொள்ளும்
தவிப்பில் மிதக் காதீர்!
அவரவர் எண்ணம் அவரவர் சுமக்க
எனது பொதுஉடைமை;பதில்
எழுதத் தெரியா திருப்போர்எல்லாம்
அவரவர் தனி உடைமை!
உங்கள் கருத்தைப் படித்துப்
பார்த்து
உடனே எழுதுவது;அது
இங்கு பொதுவில் அறிவிற்குரிய
இலக்கியம் எனும்படித்தான்!
காமெடி,சினிமா,காதல் பித்து,
கவிதை எனும் பெயரில்
யாம்இன்புற்று எழுதுவ
தில்லை;
என்னை மன் னிப்பீர்!
ஒருசில விஷயம் உருப்படியாக
உணர்ந்தால் ஏற்றிடுவேன்;
'கரு' இருந்தால் அதுஎது
என்றாலும்
கரங்களை நீட் டிடுவேன்!
தத்துப் பித்தெனத் தமிழில் எழுதித்
தள்ளிடும் ஒரு போக்கை;அதைத்
தத்துவம் போலக் கருதிக் கொள்ளும்
தவிப்பில் மிதக் காதீர்!
அவரவர் எண்ணம் அவரவர் சுமக்க
அதைநாம் வெறுப்ப தில்லை;
'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்ல!
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
12.08.2010
2 comments:
''..'தவறென' எமது தமிழை எதிர்த்தால்
தான்நாம் பொறுப்ப தில்ல!...''
ரெம்ப சர்வாதிகாரம் போல உள்ளதோ!.....
தத்துப் பித்தெனத் தமிழில் எழுதித்
தள்ளிடும் போக்கை தத்தி நடந்து தவறி விழ்ந்து எழும் மழலை என மன்னிப்பீராக
Post a Comment