Tuesday, October 4, 2011

பேராசிரியர் கா.சிவத்தம்பி

நல்லதோர் தமிழறிஞர்;
நான் இவரைக் கண்டதில்லை;
எல்லையற்ற பண்புகளின்
இலக்கணமாய் வாழ்ந்தவர்தான்;

செம்மொழியின் சீராளன்;
சிக்கியததுதான் கவலை;
செம்மொழிமா நாட்டைத்தான்
செப்புகிறேன் நண்பர்களே!

இன்னும் சிலகாலம்
இருந்திருக்க வேண்டியவர்
கன்னக் கோலர்களைக்
கரங்கொடுத்த வேதனையில்

எண்ணிக் குமைந் தாரோ
இவ்வுலகை விட்டாரோ?
மண்ணில் இவரை நாம்
மனம் வைத்துப் போற்றுகிறோம்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
4.10.2011

No comments: