Sunday, October 23, 2011

கலைமகளைக் கேளுங்கள்!



பூவில் பொலியும் வாணி; என்றன்
நாவிற்புகுந்து நற்றமிழ் செய்தாள்;
தேவி அவள்என் அன்னை;எனைத்
தேர்ந்தே இப்புவி வைத்தாள்!

கூவி அழைத்து அவள் தமிழைக்
குவிக் கின்றேன்; நான் முகநூலில்
தேவை யுடையீர்,வாருங்கள்;என்
தேன் தமிழ் விருந்தில் சேருங்கள்!

அற்புதமாக ஆர்ப்பரிக்கும்;சொல்
அடுக்கடுக்காக சரம் தொடுக்கும்;
கற்பனையிங்கே படை எடுக்கும்;அது;
காட்டா றெனவே கரை உடைக்கும்!

சிற்சில போழ்து இலக்கணத்தை
சிதறச்செய்யும்; தனை மறக்கும்!
கற்பது யாதெனக் கேட்காதீர்; அந்தக்
கலைமகள்;அவளைக் கேளுங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

No comments: