Wednesday, October 5, 2011

வாணி;என் தாய்!











முன்னைப் பழம் விதியின்
முழுப் பயனில் வைத்திங்கு
என்னைப் படைத்துலகை
எந் நாளும் காப்பவளை;
அன்னை வாணி எனும்
அறிவுடையோர் கருப் பொருளைப்
பின்தொடரும் பிள்ளைஎனப்
பேசுகின்றேன்; அறிவீரோ?

ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
‘யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன: புரிவீரோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.10.2011-ஆயுத பூஜை நாள்

No comments: