Sunday, October 30, 2011

கோடை தந்த கொடை!

















ச்சைவண்ண ஆடைகள்;
பார்வை எங்கும் மேடைகள்;
மிச்சமுள்ள சாலைகள்;
மேடுபள்ள லீலைகள்;

அங்குமிங்கும் வீடுகள்
ஆனந்தத்தின் கூடுகள்;
எங்கும் வனப்புக் கோடுகள்;
எழில் அடர்ந்த காடுகள்;

மேகம் வந்து தழுவிடும்;
மேனி அதில் சிலிர்த்திடும்;
மோகம் கொண்ட நினைவுகள்
மூட, மனம் களித்திடும்!


சின்னச் சின்ன ஓடைகள்;   
சிற்றருவி ஓசைகள்;
என்னை உன்னை ஈர்த்திடும்
இதயம் குளிரக் காட்டிடிடும்!

கொட்டும் வெய்யிற் கொடுமையை;
கொன்றுபோட்டுக் குளுமையை
எட்டுத் திக்கும் பரப்பிடும்
இயற்கை தந்த நன்கொடை:

கோடைக் கானல்மலை என
குவிந்து நிற்கக் காண்கிறேன்;
கோடியுள்ள செல் வரும்
குலையும் இன்பக் கொடையிது!

இறைவன் என்னும் சிற்பியின்
இணையில்லாத கற்பனை;
குறையிலாத சொப்பனம்
கொண்டி லங்கும் அற்புதம்!

கோடைக் கானல் செல்லுங்க்ள்;;
குலைந்து போகும் கவலைகள்;
தேடி வரும் மகிழ்ச்சியில்
தெளிவு வரும் பாருங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.10.2011

-----------------------------------------------------------------------------------------------------------------=
*  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக் கானல் சென்றிருந்தேன்;
   அப்பொழுது அதன் இயற்க்கை அழகில் லயித்தமனம் எழுதிய கவிதை இது:

   25 ஆண்டுகளுக்கு பின்பும் அந்தக் கவிதை எனது மனதில் பசுமையாய்ப்  
   படர்ந்திருந்த்து, இப்பொழுது நினைத்தும் அப்படியே கொட்டிவிட்டது,
   இங்கே.

  -கிருஷ்ணன்பாலா
---------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

V.Rajalakshmi said...

கோடை மழை பாடிப்பார்த்ததில்...
ரொம்ப நல்லா இருக்கு பட்டான பாட்டு கவிதை!