பச்சைவண்ண ஆடைகள்;
பார்வை எங்கும் மேடைகள்;
மிச்சமுள்ள சாலைகள்;
மேடுபள்ள லீலைகள்;
அங்குமிங்கும் வீடுகள்’
ஆனந்தத்தின் கூடுகள்;
எங்கும் வனப்புக் கோடுகள்;
எழில் அடர்ந்த காடுகள்;
மேகம் வந்து தழுவிடும்;
மேனி அதில் சிலிர்த்திடும்;
மோகம் கொண்ட நினைவுகள்
மூட, மனம் களித்திடும்!
சின்னச் சின்ன ஓடைகள்;
சிற்றருவி ஓசைகள்;
என்னை உன்னை ஈர்த்திடும்
இதயம் குளிரக் காட்டிடிடும்!
கொட்டும் வெய்யிற் கொடுமையை;
கொன்றுபோட்டுக் குளுமையை
இயற்கை தந்த நன்கொடை:
கோடைக் கானல்மலை என
குவிந்து நிற்கக் காண்கிறேன்;
கோடியுள்ள செல் வரும்
குலையும் இன்பக் கொடையிது!
இறைவன் என்னும் சிற்பியின்
இணையில்லாத கற்பனை;
குறையிலாத சொப்பனம்
கொண்டி லங்கும் அற்புதம்!
கோடைக் கானல் செல்லுங்க்ள்;;
குலைந்து போகும் கவலைகள்;
தேடி வரும் மகிழ்ச்சியில்
தெளிவு வரும் பாருங்கள்!
தெளிவு வரும் பாருங்கள்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
30.10.2011
-----------------------------------------------------------------------------------------------------------------=
* சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக் கானல் சென்றிருந்தேன்;
அப்பொழுது அதன் இயற்க்கை அழகில் லயித்தமனம் எழுதிய கவிதை இது:
* சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக் கானல் சென்றிருந்தேன்;
அப்பொழுது அதன் இயற்க்கை அழகில் லயித்தமனம் எழுதிய கவிதை இது:
25 ஆண்டுகளுக்கு பின்பும் அந்தக் கவிதை எனது மனதில் பசுமையாய்ப்
படர்ந்திருந்த்து, இப்பொழுது நினைத்தும் அப்படியே கொட்டிவிட்டது,
இங்கே.
-கிருஷ்ணன்பாலா
---------------------------------------------------------------------------------------------------------------------
1 comment:
கோடை மழை பாடிப்பார்த்ததில்...
ரொம்ப நல்லா இருக்கு பட்டான பாட்டு கவிதை!
Post a Comment