Thursday, October 6, 2011

அன்னை கலைவாணி



















என்னைப் படைத்துலகை
எந்நாளும் காக்கின்ற
அன்னை கலைவாணி
அடிமலரைப் பணிகின்றேன்!

உண்மை,உயர் நோக்கம்
ஒருநாளும் தளராத
திண்மைமிகு நெஞ்சம்;
தெளிவான தமிழ்த்தேடல்!

நேர்கொண்ட எழுத்துக்கள்
நிஜமான கருத்துக்கள்
யார் என்னை எதிர்த்தாலும்
எதிர் நிற்க முடியாது;

பார் என்று பறை சாற்றும்
பைந்தமிழின் வல்லோனாய்
வார்த்தென்னை வைத்தாளை
வணங்குகிறேன் இந்நாளில்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
 6.10.2011 – விஜய தசமி நாள்

No comments: