Saturday, October 1, 2011

பாரில் உயர்ந்த மொழி!

*எம் மொழி
-------------------
நேர்கொண்ட நெஞ்சோடு நிமிர்ந்து நின்று
நினைக்கின்ற எண்ணத்தை வடித்து,இங்கு
யார்என்ன சொன்னாலும்;எதிர்ப்பை எல்லாம்
எதிர்வென்று சாய்க் கின்றவாறு இங்கு
கூர்கொண்டு நிற்கும் எம்கவிதை,காண்க;
குறை மதியோர் நம்முன்னே வெட்கம் கொள்ளப்
பார்’என்றே படைக்கின்றோம்;நம்மொழிதான்
பார்இதிலே உயர்ந்ததென்று நிற்போம்;வாரீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.09.2011

--------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்,பாவலர் இராஜ.தியாகராஜன் அவர்களின்  முகநூல் பக்கத்தில்
பதித்த கவிதை
---------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: