Sunday, October 23, 2011

இது விஷமமல்ல;விஷயம்!










திரு.அண்ணாஸ்வாமி சந்தானம் (Annaswami Santhanam) எனும் முகநூல் நண்பர்,நான் முகநூலில் எழுதிவரும் பதிவுகள் பற்றி இவ்வாறு கருத்துச் சொல்லியிருந்தார்:  ” Very good. But sometimes your Tamil is poor. Why is that?”
 நான் அவருக்குச் சொன்ன பதிலை இங்கு யாவரும் அறியத் தருகிறேன்:


இது விஷமமல்ல;விஷயம்!
----------------------------------------------------
ஏழையர்க்கு எழுதுங்கால்,ஏழ்மைநிலை யோடிருக்கும்;
இறுமாப்புக் கொள்ளுங்கால் செறுக்கோடுதான் மிளிரும்;
வாழையடி வாழையென வந்துதிக்கும் என் தமிழை
வந்திங்கு உண்போர்க்கு வரும்பொருளைக் காட்டுகின்றேன்!

கலைமகள் என் அன்னை கருணை செய்தருளியதைக்
கரமெடுத்து எழுதுகின்றேன்;காண்போர்க்கு இது புரியும்;
சிலபோழ்து பாண்டிதர்க்குச் சிறுபிழையும் பெரிதாகும்;
செந்தமிழில் எழுதுவது இங்கென்றன் நோக்கமல்ல!

எத்தனை பேர் தமிழறிந்து எண்ணத்தை விரிக்கின்றார்?.
என்பதல்ல என் பார்வை; என் வழியில், நற்றமிழின்
வித்தகத்தை விரித்திங்கு விஷயத்தைச் சொல்வதுதான்:
விவாதம் என வந்தால்;விளையாடிப் பார்ப்பதுதான்!

விஷயத்துடன்-
கிருஷ்ணன்பாலா
23.10.2011

No comments: